/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னையில் 764 கிலோ குட்கா சிக்கியது ரூ.5.45 லட்சம், 3 கார்கள் பறிமுதல்; 3 பேர் கைது
/
சென்னையில் 764 கிலோ குட்கா சிக்கியது ரூ.5.45 லட்சம், 3 கார்கள் பறிமுதல்; 3 பேர் கைது
சென்னையில் 764 கிலோ குட்கா சிக்கியது ரூ.5.45 லட்சம், 3 கார்கள் பறிமுதல்; 3 பேர் கைது
சென்னையில் 764 கிலோ குட்கா சிக்கியது ரூ.5.45 லட்சம், 3 கார்கள் பறிமுதல்; 3 பேர் கைது
ADDED : மே 11, 2024 12:49 AM

சென்னை:சென்னையில், காரில் கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 767 கிலோ குட்கா புகையிலை போதை பொருட்கள் சிக்கின. இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார், மூன்று கார்கள் மற்றும் 5.45 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, நேற்று முன்தினம் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மூன்று கார்களை மடக்கி அதன் ஓட்டுனரிடம் விசாரித்தனர். இதில், மூவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார் கார்களை சோதனையிட்டனர்.
இதில், மூன்று கார்களிலுமாக மொத்தம் 764 கிலோ குட்கா போதை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ், 27, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதன் ஜான்கிட், 25, கீழகோட்டையூரைச் சேர்ந்த ராஜேந்திர பாரிக்கர், 29, ஆகியோர் என்பதும், மூவரும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
நேற்று மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5.45 லட்சம் ரூபாய், தலா மொபைல் போன்கள், கார்களையும் பறிமுதல் செய்தனர். சிக்கிய குட்கா பொருட்களின் மதிப்பு 55 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.
சிறப்பாக செயல்பட்ட அண்ணாசாலை காவல் நிலைய போலீசாரை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பாராட்டினார்.