/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எப்.ஓ.பி., வீசிய லத்தியால் சிறுவன் படுகாயம்
/
எப்.ஓ.பி., வீசிய லத்தியால் சிறுவன் படுகாயம்
ADDED : மே 23, 2024 11:18 PM
சென்னை,பெரம்பூரில், போலீஸ் எஸ்.ஐ., அனுஜன், எப்.ஓ.பி., எனும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சந்தோஷ் என்பவருடன், நேற்று அதிகாலை 2:30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்த சிறுவர்களை, சோதனைக்காக நிறுத்த சொல்லி உள்ளனர். அவர்கள், நிற்காமல் சென்றுள்ளனர். அப்போது, சந்தோஷ் லத்தியை எடுத்து வீசியதில் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
விசாரணையில், புளியந்தோப்பு 4வது தெருவைச் சேர்ந்தவர் ஷாயின்ஷா என்பவரின் மகன்கள் என்பது தெரிய வந்தது. அவரது மூத்த மகன் 10ம் வகுப்பும், இளைய மகன் 8ம் வகுப்பும் படிக்கிறார்.
தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், மாத்திரை வாங்கி வர, ஸ்கூட்டரில் பெரம்பூர் முரசொலி மேம்பாலம் வழியே இருவரும் சென்றுள்ளனர். அப்போது இளைய மகன் மீது தான் சந்தோஷ் வீசிய லத்தி பட்டு காயம் ஏற்பட்டது.
சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ், 25, என்பவரிடம் விசாரித்த போலீசார், அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.