sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்புச்சுவர் இல்லாத பாலம் கரணம் தப்பினால் மரணம்

/

தடுப்புச்சுவர் இல்லாத பாலம் கரணம் தப்பினால் மரணம்

தடுப்புச்சுவர் இல்லாத பாலம் கரணம் தப்பினால் மரணம்

தடுப்புச்சுவர் இல்லாத பாலம் கரணம் தப்பினால் மரணம்


ADDED : ஆக 20, 2024 11:01 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி 51வது வார்டு தேனம்பாக்கத்திற்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே, 9.80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறுபாலம், கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக தேனம்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர். சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், இவ்வழியாக செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, வேகவதி ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

மேலும், இந்த பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே, தேனம்பாக்கத்திற்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us