sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிளாஸ்டிக் குப்பை குவிந்து துார்ந்து கிடக்கும் கால்வாய்

/

பிளாஸ்டிக் குப்பை குவிந்து துார்ந்து கிடக்கும் கால்வாய்

பிளாஸ்டிக் குப்பை குவிந்து துார்ந்து கிடக்கும் கால்வாய்

பிளாஸ்டிக் குப்பை குவிந்து துார்ந்து கிடக்கும் கால்வாய்


ADDED : ஜூலை 29, 2024 04:56 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாநகராட்சி, சாத்தான்குட்டை பின்பக்க தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியல் மற்றும் மண் துகள் கழிவுகளால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே, சாத்தான்குட்டை பின்பக்க தெருவில், கால்வாயில் மண்டியுள்ள குப்பை குவியலை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us