sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கடவுப்பாதையில் சிக்கிய கார் ஏகாட்டூரில் பரபரப்பு

/

கடவுப்பாதையில் சிக்கிய கார் ஏகாட்டூரில் பரபரப்பு

கடவுப்பாதையில் சிக்கிய கார் ஏகாட்டூரில் பரபரப்பு

கடவுப்பாதையில் சிக்கிய கார் ஏகாட்டூரில் பரபரப்பு


ADDED : ஏப் 01, 2024 02:18 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் நேற்று கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சியிலிருந்து தன் பிரசாரத்தை துவக்கினார்.

தொடர்ந்து கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துார், மேல்நல்லாத்துார், அதிகத்துார், ஏகாட்டூர் வழியாக கடம்பத்துாருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதிகத்துார் - ஏகாட்டூர் இடையே உள்ள சென்னை - அரக்கோணம் ரயில்வே கடவுப்பாதையை கடக்கும் போது ரயில்வே கேட் மூடுவதற்கான அலாரம் அடித்தது.

அதற்குள் வேட்பாளரின் பிரசார வாகனமும் உடன் வந்த இரண்டு கார்களும் கடவுப்பாதையை கடந்து விட்டன.

மூன்றாவதாக வந்த டொயோட்டோ இன்னாவோ கார் கடக்கும்போது கேட் கீப்பர் உடனடியாக கேட்டை மூடிவிட்டார்.

இதனால் அந்த கார் இரு தண்டவாளங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. மற்ற கார்கள் உடனடியாக பின்னோக்கிச் சென்றதால் தண்டவாளத்தில் சிக்கவில்லை.

கடவுப்பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு சரக்கு ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில் கடந்து சென்றது.

அதன் பின் கடவுப்பாதை திறக்கப்பட்டவுடன் நடுவில் நின்ற கார் பாதுகாப்பாக வெளியே சென்றது.

இச்சம்பவத்தால் ஏகாட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us