sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை

/

அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை

அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை

அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை


ADDED : ஜூன் 07, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது.

இக்கோவிலில் 2 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணி செய்யப்பட்டு கடந்த பிப்., மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இந்நிலையில் இக்கோவிலில் உள்ள குதிரை நேற்று, குட்டியை ஈன்றது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது:

சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தரான பொறியாளர் ஜெயபிரகாஷ் என்பவர், கடந்த பிப்., 23ம் தேதி, அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு, பெண் குதிரை ஒன்றை தானமாக வழங்கினார். அந்த குதிரைக்கு புஷ்பா என, பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் புஷ்பா குதிரை நேற்று, அதிகாலை 2:00 மணிக்கு குட்டியை ஈன்றது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தாய் குதிரையும், குட்டியும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குதிரை குட்டிக்கு, ரோகிணி என்ற பெயர் சூட்டி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us