/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை கடந்தவர் வாகனம் மோதி மரணம்
/
சாலையை கடந்தவர் வாகனம் மோதி மரணம்
ADDED : ஜூன் 15, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் பகுதியில் நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் சாலையை கடந்து சென்றவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைப் பார்த்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.