/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலுாரில் சாலையோரம் சாய்ந்த நிலையில் மின்கம்பம்
/
காலுாரில் சாலையோரம் சாய்ந்த நிலையில் மின்கம்பம்
ADDED : ஏப் 08, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
களக்காட்டூர் : காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் இருந்து, காலுார் செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், காலுார் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. நாளுக்குள் நாள் சாய்ந்து வரும் மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து விழுந்தால், வாகன போக்குவரத்து உள்ள இப்பகுதியில், மின்விபத்து ஏற்பட்டு, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, காலுார் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

