sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலி கடித்ததால் பரபரப்பு

/

அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலி கடித்ததால் பரபரப்பு

அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலி கடித்ததால் பரபரப்பு

அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலி கடித்ததால் பரபரப்பு


ADDED : மே 10, 2024 12:48 AM

Google News

ADDED : மே 10, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 34. ஜே.சி.பி., இயந்திர ஆப்பரேட்டர். இவர் குடும்ப பிரச்சனையில், நேற்று முன்தினம் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொன்னேரி போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து இருந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள குப்பனின் சடலத்தை பார்த்த போது, மூக்கு சேதம் அடைந்து இருந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, எலி கடித்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், குப்பனின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பின் சடலத்தை வாங்க மறுத்தனர்.

பொன்னேரி போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அதை ஏற்று, உறவினர்கள் குப்பனின் சடலத்தை பெற்று சென்றனர்.






      Dinamalar
      Follow us