sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு

/

மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு

மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு

மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு


ADDED : ஜூலை 22, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி வடக்கு மாட வீதியில், மாகாளியம்மனுக்கும், கன்னியம்மனுக்கும் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா, கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.

தொடர்ந்து மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது.

நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு மாகாளியம்மன், கன்னியம்மன் வீதியுலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. இரவு 8:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கும்பம் படையலும் நடந்தது.

இரவு 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாகாளியம்மன் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us