sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் ஆடி கருட உற்சவம் விமரிசை

/

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் ஆடி கருட உற்சவம் விமரிசை

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் ஆடி கருட உற்சவம் விமரிசை

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் ஆடி கருட உற்சவம் விமரிசை


ADDED : ஜூலை 22, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவத்தின்3ம் நாள் உற்சவத்தின்போது, கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

இதேபோல, ஆனி, ஆடி மாதங்களில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆனி கருடன், ஆடி கருடன் என, கருட சேவை உற்சவம் நடக்கிறது.

அதன்படி ஆனி மாதத்திற்கான ஆனி கருடன் உற்சவம் கடந்த 15ம் தேதி நடந்தது. ஆடி கருடன் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று, மாலை 5:00 மணிக்கு, பெருமாள், வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு கருடசேவையையொட்டி விசேஷ மலர் அலங்காரம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு அனந்தசரஸ் திருக்குளம் அருகில், வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு கஜேந்திர மோக் ஷம் நடந்தது. தொடர்ந்து ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து, திருவடிகோவில் வழியாக மாட வீதியில் கருட வாகனத்தில் உலா வந்தார்.

வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வரதராஜ பெருமாளை வழிபட்டனர். இரவு 8:30 மணிக்கு ஆளவந்தார் சாற்றுமறை உற்சவம் நடந்தது.






      Dinamalar
      Follow us