sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மனைவி வேறு நபருடன் ஓட்டம் மகளை கொன்று வாலிபர் தற்கொலை

/

மனைவி வேறு நபருடன் ஓட்டம் மகளை கொன்று வாலிபர் தற்கொலை

மனைவி வேறு நபருடன் ஓட்டம் மகளை கொன்று வாலிபர் தற்கொலை

மனைவி வேறு நபருடன் ஓட்டம் மகளை கொன்று வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 16, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன், 32; கார்பென்டர். இவரது மனைவி பரிமளா, 30. இவர்களுக்கு 5 வயது மகள் உள்ளார்.

இந்த நிலையில், பரிமளாவுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவனை பிரிந்த பரிமளா, குழந்தை மற்றும் அந்த நபருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு சென்ற மோகன், பரிமளாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின், மகளை அழைத்துக் கொண்டு, தன் வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் மோகன், அவரது மகள் வீட்டை வீட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, சிறுமி வாயில் நுரை தள்ளியபடியும், மோகன் புடவையால் துாக்கிட்டும் இறந்தது தெரிய வந்தது.

இருவரது உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி வேறு நபருடன் சென்றதால் மன உளைச்சலில் இருந்த மோகன், தன் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us