sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 2 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம் துவக்கம்

/

காஞ்சியில் 2 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம் துவக்கம்

காஞ்சியில் 2 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம் துவக்கம்

காஞ்சியில் 2 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 11, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் 16ல், அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் முதல், கடந்த வியாழக்கிழமை வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இதனால், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்ற கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், திங்கட்கிழமையான நேற்று, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம், நடந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 339 பேர், தங்களது கோரிக்கை, புகார் மனுக்களை கலெக்டர் கலைச்செல்வியிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us