sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது

/

பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது

பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது

பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது


ADDED : ஜூன் 16, 2024 12:00 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில், 2021 - 22 துாய்மை இந்தியா திட்டம் 2.0 சார்பில், 36.28 லட்சம் ரூபாய் செலவில் பொது கழிப்பறை கட்டப்பட்டது.

அப்பகுதிவாசிகள் மட்டுமின்றி கழிப்பறை அருகில் உள்ள அனேகதங்காவதேஸ்வரர், கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம் கட்டுமானப் பணி இரு மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது.

கட்டுமானப் பணி முடிந்த நிலையில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பொது கழிப்பறை கட்டடம் திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

இதனால், கழிப்பறை வளாகம் வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால், கைலாசநாதர் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டடம் அடுத்த வாரம் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us