/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழந்தைகளுக்கு எட்டும் துாரத்தில் திறந்து இருக்கும் மின் பெட்டி
/
குழந்தைகளுக்கு எட்டும் துாரத்தில் திறந்து இருக்கும் மின் பெட்டி
குழந்தைகளுக்கு எட்டும் துாரத்தில் திறந்து இருக்கும் மின் பெட்டி
குழந்தைகளுக்கு எட்டும் துாரத்தில் திறந்து இருக்கும் மின் பெட்டி
ADDED : ஆக 08, 2024 02:30 AM

உத்திரமேரூர் அடுத்த, மேல் துாளி கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் தெரு, விநாயகர் தெரு, மாரியம்மன் கோவில், தேரடி தெரு, பள்ளத்தெரு, குளக்கரை தெரு உள்ளிட்ட 10 தெருக்கள் உள்ளன. அனைத்து தெருக்களுக்கும், தெரு விளக்குகளை கட்டுப்படுத்தும் மின் பெட்டி, விநாயகர் கோவில் தெரு மின் கம்பத்தில் உள்ளது.
இந்த மின் பெட்டி குழந்தைகளின் கைக்கு எட்டும் துாரத்தில் இருக்கிறது. மேலும், எப்போதும் மின் பெட்டி திறந்த நிலையில் இருப்பதால் மின் விபத்து ஏற்படும் அபாயம்உள்ளது.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் உயரமான பகுதியில் மின் பெட்டியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நா. அசோக்,
துாளி.