/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 26, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சியில் உள்ள தனியார் கல்லுாரி சார்பில், சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி நடந்தது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கிய சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணிக்கு, சிவ காஞ்சி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
தனியார் கல்லுாரி முதல்வர் ராம்நாத் பேரணியை, கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி, இந்திரா காந்தி சாலை, மேற்கு ராஜவீதி, ஏகாம்பரநாதர் கோவில் முன் நிறைவடைந்தன.
இதில், தனியார் கல்லுாரி மற்றும் அரசு பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்று, போதைக்கு எதிரான வாசகங்களை கூறி விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கினர்.