/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 29, 2024 11:09 PM
காஞ்சிபுரம்:சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெற விரும்புவோர், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.
விருது பெற விண்ணப்பிக்க விரும்புவோர், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், ஜூன் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில், கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.