sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு! 18ல் 9 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்' 

/

காஞ்சியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு! 18ல் 9 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்' 

காஞ்சியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு! 18ல் 9 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்' 

காஞ்சியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு! 18ல் 9 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்' 


ADDED : ஆக 20, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சட்டசபை பொது நிறுவனங்கள் குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தது. குழுவின் தலைவர் நந்தகுமார் தலைமையில், உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் செவிலிமேடில், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட உள்ள பன்னடுக்கு அடுக்குமாடி கட்டட பணிகளை இந்த குழு பார்வையிட்டது. இதையடுத்து, ஓரிக்கையில் உள்ள ஜரிகை உற்பத்தி ஆலையையும், அங்குள்ள சிறிய அளவிலான பட்டு பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

இதைத் தொடர்ந்து, வல்லம் ஊராட்சியில் 700 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட தொழிலாளர் விடுதியையும், அங்குள்ள இருசக்கர உற்பத்தி தொழிற்சாலையையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, திட்ட செயல்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் குழு உறுப்பினர்கள் கேட்டறிந்தனர். பின், கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், குழுவின் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.

இதில், கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாதி உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்!'


பொது நிறுவனங்கள் குழுவில், தலைவர் உட்பட 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், ஒன்பது பேர் மட்டுமே வளர்ச்சி பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். மொத்தமுள்ள 18 பேரில், 9 பேர் வரவில்லை. சட்டசபையின் பல்வேறு குழுக்கள் ஆய்வுக்கு வரும்போது, உறுப்பினர்கள் பலரும் வராமல் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், காங்., மாநில தலைவரும், பொது கணக்கு குழு தலைவருமான செல்வபெருந்தகை தலைமையில், பொது கணக்கு குழு ஆய்வுக்கு வந்தது. மொத்தமுள்ள 19 பேரில், 10 பேருக்கு மேல் 'ஆப்சன்ட்' ஆகினர்.








      Dinamalar
      Follow us