sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பினாயூர் எல்லையம்மன் கோவில் குளக்கரை கொட்டகை, வைக்கோல் குவித்து ஆக்கிரமிப்பு

/

பினாயூர் எல்லையம்மன் கோவில் குளக்கரை கொட்டகை, வைக்கோல் குவித்து ஆக்கிரமிப்பு

பினாயூர் எல்லையம்மன் கோவில் குளக்கரை கொட்டகை, வைக்கோல் குவித்து ஆக்கிரமிப்பு

பினாயூர் எல்லையம்மன் கோவில் குளக்கரை கொட்டகை, வைக்கோல் குவித்து ஆக்கிரமிப்பு


ADDED : செப் 09, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 09, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் கிராமத்தில் உள்ளது எல்லைஅம்மன் கோவில். இந்த கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பிலான பொதுக் குளம் உள்ளது.

கோவில் விழா உள்ளிட்ட விசேஷ நாட்களில், இந்த குளத்து நீரை பயன்படுத்தி அம்மனுக்கு பூஜைகள் மேற்கொள்வது வழக்கம்.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கோவில் குளக்கரை பகுதியை சுற்றிலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கால்நடை கொட்டகை மற்றும் வைக்கோல் குவித்து ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும், சில மாதங்களாக இக்குளத்திற்கான வரத்து கால்வாய்கள் துார்ந்து, மழைக்காலங்களில் குளத்திற்கு நீர் வரத்து இல்லாத நிலை உள்ளது.

இதனால், மழைக்காலங்களில் குளத்தில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாமல் உள்ளது. எனவே, இந்த குளக்கரையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தின் நீர் பிடிப்பு பகுதியில் துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us