/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இங்கிலாந்து நாட்டு துணை துாதுவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடல்
/
இங்கிலாந்து நாட்டு துணை துாதுவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடல்
இங்கிலாந்து நாட்டு துணை துாதுவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடல்
இங்கிலாந்து நாட்டு துணை துாதுவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடல்
ADDED : மார் 05, 2025 01:17 AM

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூரில் பட்டு பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினமும், பல்வேறு வடிவங்களில், தரமான பட்டுச்சேலையை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்த பட்டுபூங்காவை பார்வையிட, இங்கிலாந்து நாட்டின் துணை துாதுவர் ஹலீமா ஹாலந்த் நேற்று காலை வந்தார். பூங்காவின் செயல் இயக்குநர் ராமநாதன் பூங்கா செயல்படும் விதம் குறித்து துணை துாதுவருக்கு விளக்கினார்.
பட்டு பூங்காவில் சேலைகள் உற்பத்தி செய்யப்படும் விதம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பட்டுச்சேலை ஏற்றுமதி செய்யப்படும் விபரங்கள், பட்டு சேலைகளில் பாரம்பரிய கலையை வடிவமைக்கும் விதம் உள்ளிட்டடை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து, பூங்காவில் பணிபுரியும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். துணைத் தூதுவர் பார்வையிடும் போது பட்டுப்பூங்காவின் தலைவர் சுந்தர்கணேஷ் உடன் இருந்தார்.