/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
/
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 01, 2025 12:16 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகளில் உள்ள 850க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம் பவளவண்ண பெருமாள் கோவில் தெரு - ஜவஹர்லால் நேரு சாலை சந்திப்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு, நான்கு நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடையும் சூழல் உள்ளது.
எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.