sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை வாயிலில் நிறுத்தம் இருந்தும் நிற்காமல் செல்லும் பஸ்கள்

/

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை வாயிலில் நிறுத்தம் இருந்தும் நிற்காமல் செல்லும் பஸ்கள்

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை வாயிலில் நிறுத்தம் இருந்தும் நிற்காமல் செல்லும் பஸ்கள்

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை வாயிலில் நிறுத்தம் இருந்தும் நிற்காமல் செல்லும் பஸ்கள்


ADDED : ஜூலை 17, 2024 09:29 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, வெளியூர், உள்ளூர் என, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இம்மருத்துவமனைக்கு அரசு பேருந்துகளில் வருவோர், மருத்துவமனை வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயல்கின்றனர். ஆனால், பெரும்பாலான அரசு பேருந்துகள் புற்றுநோய் மருத்துவமனை வாசலில் நிற்காமல் செல்கின்றன.

அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி எதிரிலும், பொன்னேரிக்கரை சந்திப்பிலும் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்பதால், பயணியர், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

ஏற்கனவே, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, மருத்துவமனை வாசலில் பேருந்துகளை நிற்க அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால், அரசு பேருந்துகள், புற்றுநோய் மருத்துவமனை வாசலில் உள்ள நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மருத்துவமனை நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us