sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் ஏற்பாடு தீவிரம்

/

சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் ஏற்பாடு தீவிரம்

சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் ஏற்பாடு தீவிரம்

சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் ஏற்பாடு தீவிரம்


ADDED : ஏப் 20, 2024 11:15 PM

Google News

ADDED : ஏப் 20, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் வரும் 23ல் நடக்கிறது.

உற்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், நாளை, இரவு 9:30 மணிக்கு, அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்படுகிறார். இரவு 11:00 மணிக்கு செவிலிமேடில் மண்டகப்படி நடக்கிறது.

மறுநாள், 23ல், அதிகாலை 5:00 மணிக்கு புஞ்சையரசந்தாங்கலில் மண்டகப்படி நடக்கிறது.

துாசி வைகுண்டநாதர் கோவிலில் 12:00 மணியளவில் சுவாமிக்கு மரியாதை நிகழ்ந்ததும், அங்கிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பாடாகி மாலை 3:00 மணியளவில் அய்யங்கார்குளம் கிராமத்தில் வீதியுலா சென்று, மாலை 5:00 மணியளவில், சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

இரவு 8:00 மணியளவில் நடவாவி இறங்கி, பக்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து எழுந்தருளி புஞ்சையரசந்தாங்கல் வழியாக பாலாற்று பந்தலில் இரவு 9:30 மணிக்கு எழுந்தருள்கிறார்.

அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பிரம்மாராதமன், நிவேதனம், பூஜைகளுக்குப்பின், பாலாற்றில் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

உற்சவத்தையொட்டி நடவாவி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து கிணற்றை சுற்றியுள்ள பகுதியில் முளைத்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு, நடவாவி கிணறு சுத்தம் செய்யும் பணியும், சஞ்சீவிராயர் கோவிலில் மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us