sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பணம் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்

/

பணம் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்

பணம் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்

பணம் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்


ADDED : மார் 29, 2024 09:25 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், பிரதான கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதால், வேட்பாளர்களின் பிரசாரம் மேலும் தீவிரமாகியுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், பா.ம.க., வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கிராமம் வாரியாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு 'அசைன்மென்ட்' கொடுத்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர்.

அதில் முக்கிய பணியாக, தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களில், 'நம் கட்சியினர் எத்தனை பேர் உள்ளனர்' என்ற விபரத்தை கணக்கெடுத்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராமம், பேரூராட்சி, மாநகராட்சி வார்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், தங்கள் கட்சியினருக்கு உள்ள வாக்காளர்கள் எத்தனை பேர், அதில் ஆண், பெண் எத்தனை பேர் என கணக்கெடுக்கின்றனர்.

கணக்கெடுப்பு பணி நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என பிரதான கட்சியினர் தங்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் நிர்வாகிகளுக்கு நான்கு நாள் செல்வாக, 20,000 முதல் 30,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பு பணி முடிந்த பின், ஒவ்வொரு பகுதியிலும், எத்தனை வீடுகளில், எத்தனை ஓட்டுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற புள்ளி விபரத்துக்காக இந்த கணக்கெடுப்பு பணியை அரசியல் கட்சியினர் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறியதாவது :

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தேர்தல் கமிஷனாலும் இவற்றை தடுக்க முடியவில்லை.

இதனால், வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினர் இம்முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். எத்தனை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற தோராய கணக்கு வேண்டும் என்பதற்காகவே, வார்டு வாரியாகவும், கிராமம், பகுதி வாரியாகவும் கட்சியினர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

தங்கள் கட்சி ஓட்டு எத்தனை உள்ளது என்ற விபரம் அளித்தவுடன், மேலிடத்திலிருந்து பணம் வரும். அவற்றை வாக்காளர்களுக்கு ரகசியமாக சப்ளை செய்ய வேண்டும். இதுதான் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்டாக தற்போது உள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில், 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 25 சதவீதம் பேர் ஓட்டளிப்பதே இல்லை. 4.5 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட வரமாட்டார்கள்.

மீதமுள்ள 12 லட்சம் பேரில், நாம் தமிழர், பா.ம.க., சுயேச்சை ஆகியோர் மூன்று லட்சம் ஓட்டு பெறுவர். இதுபோக, ஒன்பது லட்சம் ஓட்டுகளில், தி.மு.க., - -அ.தி.மு.க., ஆகிய இரு பிரதான கட்சியினர் யார் அதிகம் பெற போகிறார்கள் என்பதில் தான் போட்டியே உள்ளது.

வெற்றி பெறுவதற்கு, ஐந்து லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வாய்ப்புள்ளது. இதற்காக தான், கட்சி நிர்வாகிகள் இப்போதே கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு


காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும், அ.தி.மு.க., 'பூத்' கமிட்டி பொறுப்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி 18 வது வார்டு சேக்குப்பேட்டை சாலியர் தெரு, கவரைத்தெரு, நடுத்தெரு பகுதியில் நேற்று, வட்டச் செயலர் ஜி.மணி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, ஒரு குடும்பத்தில் மொத்தம் எத்தனை ஓட்டுகள் உள்ளன. அதில், ஆண், பெண், முதல் வாக்காளர் யார், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர், வெளியூரில் வசிப்பவர், இறந்த வாக்காளர் என, அனைத்தையும் சரிபார்த்து வருகின்றனர்.
தேர்தலில் எத்தனை ஓட்டு பதிவாகும் என்பதற்காகவும், ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us