ADDED : செப் 17, 2024 06:12 AM

அ நிறம் | அளவு
சாலை வளைவில் நிறுத்தப்படும் வாகனம் அகற்றப்படுமா?
உத்திரமேரூர் அடுத்து மேல்துாளி கிராம பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனம் சாலை வளைவில் நிறுத்தப்படுகிறது.
அந்த வழித்தடத்தில், பிற பேருந்துகள் செல்லும் போது, வீட்டு வாசல் மீது செல்கிறது. இதனால், விபத்து மற்றும் வாய் தகராறு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, சாலை வளைவில் தொழிற்சாலை வாகனம் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நா.அசோக், மேல்துாளி.
