ADDED : செப் 17, 2024 06:20 AM

அ நிறம் | அளவு
நல்லுார் மயானத்தை சூழ்ந்த புதர்கள்
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்டது நல்லுார் கிராமம். இந்த கிராமத்திற்கான மயானம், உத்திரமேரூரில் இருந்து, நல்லுார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதி மயானத்தில், எரி மேடையை சுற்றி பல வகையான செடி, கொடிகள் வளர்ந்து புதராக உள்ளது.
இதனால், இப்பகுதி மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய அதற்கான இடத்தை சீர் செய்வதில் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
எனவே, நல்லுார் பகுதி மயானத்தில் புதர்களை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர். மதியழகன், உத்திரமேரூர்.
