sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆசிரியை பற்றி அநாகரிகமான பேச்சு கல்வி அதிகாரியை கண்டித்து தர்ணா

/

ஆசிரியை பற்றி அநாகரிகமான பேச்சு கல்வி அதிகாரியை கண்டித்து தர்ணா

ஆசிரியை பற்றி அநாகரிகமான பேச்சு கல்வி அதிகாரியை கண்டித்து தர்ணா

ஆசிரியை பற்றி அநாகரிகமான பேச்சு கல்வி அதிகாரியை கண்டித்து தர்ணா


ADDED : ஜூன் 28, 2024 10:36 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துாரில் இரு கட்டங்களாக நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கந்தவேல், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டார்.

இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் கந்தவேல், ஆசிரியர்களுக்கான 'வாட்ஸாப்' குழு ஒன்றில், பெண் ஆசிரியர் ஒருவர் குறித்து தரக்குறைவாக பேசி பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு, ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது.

இதனால், எண்ணும் எழுத்தும் முகாமின் கடைசி நாளான நேற்று, பயிற்சியை புறக்கணித்த ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், காஞ்சிபுரம் பகுதி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தமிழ்செல்விக்கு, கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து அவர், ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us