sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

/

திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்


ADDED : மே 03, 2024 12:52 AM

Google News

ADDED : மே 03, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- பழையசீவரம் பாலாற்றின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம் உள்ளது.

திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் மூலம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

திருமுக்கூடல் சுற்றுவட்டாரத்தில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து, எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லோடு லாரிகள் திருமுக்கூடல் பாலத்தின் வழியாக பல பகுதிகளுக்கு செல்கின்றன.

இந்த லாரிகளில் தார்ப்பாய் மூடாததால் பறக்கும்மண்புழுதி மற்றும் லாரி சக்கரங்களில் படிந்த மண், பாலத்தின் ஓரங்களில் குவிந்து கிடக்கின்றன.

இவை காற்றில் புழுதியாக பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைவதோடு, மணல் தேங்கி உள்ள சாலையோர பகுதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, திருமுக்கூடல் பாலத்தின் மீது குவிந்துள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us