sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நிழற்குடை இல்லாததால் கீற்றுக்கொட்டையில் பயணியர் தஞ்சம்

/

நிழற்குடை இல்லாததால் கீற்றுக்கொட்டையில் பயணியர் தஞ்சம்

நிழற்குடை இல்லாததால் கீற்றுக்கொட்டையில் பயணியர் தஞ்சம்

நிழற்குடை இல்லாததால் கீற்றுக்கொட்டையில் பயணியர் தஞ்சம்


ADDED : செப் 15, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல சிறப்புகள் பெற்ற இந்த கோவிலுக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் உள்ள வல்லக்கோட்டை பேருந்து நிறுத்ததில், பயணியர் நிழற்குடை வசதி இல்லை.

இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பேருந்திற்குகாக காத்திருக்கும் போது சிரமப்படுகின்றனர். சாலையோரம் கடைகளிலும், திறந்த வெளியிலும் மழை, வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் அவதி அடைகின்றனர்.

எனவே, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும், வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us