sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

/

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை


ADDED : ஜூலை 02, 2024 11:41 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரதம் மற்றும் தீமிதி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில், தினமும், பிற்பகல் 1:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை கம்மாளம்பூண்டி மதுரா, ஆள்வராம்பூண்டி ராமசாமி பாகவதர் மகாபாரத சொற்பொழிவாற்றுகிறார். மேல்நந்தியம்பாடி குமார் கவி வாசிக்கிறார்.

ஜூன் 19ம் தேதியில் இருந்து, தினமும் இரவு 10:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், நெடும்பிறை கிராமம் பொன்னியம்மன் கட்டைகூத்து கலைமன்றத்தினரின் மகாபாரத நாடகம் நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்தனர்.

விழாவில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று தருமர் பட்டாபிஷேகத்துடன், மஹாபாரதம் மற்றும் தீமிதி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us