/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துாரில் ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் கைது
/
பரந்துாரில் ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் கைது
பரந்துாரில் ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் கைது
பரந்துாரில் ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:12 AM

காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு தேவைப்படும் மொத்தம், 5,400 ஏக்கர் நிலத்தில், 3,750 ஏக்கர் நிலம் தனியார் வசம் உள்ளன. பரந்துார் விமான நிலைய திட்ட நிர்வாக பணிகளை மேற்க்கொள்ளும் முகமையான, 'டிட்கோ' என, அழைக்கப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.
பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தினர், 700 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
விவசாயம், நீர் நிலைகளை காக்க பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். கிராமத்தினர் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கி உள்ளது.
சொந்த ஊரில் வாழ தகுதி இல்லாததால், தமிழகத்தை விட்டு ஆந்திர மாநிலம் பகுதியில் தஞ்சம் போக உள்ளதாக, ஏகனாபுரம் கிராமத்தினர் அறிவித்தனர். சித்துார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் -30ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டத்தையும், அப்பகுதியினர் புறக்கணித்தனர். ஜூலை- 3ம் தேதி முதல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அறிவிப்பு அறிவித்திருந்தனர்.
அதற்காக, நேற்று, காலை 8:00 மணி அளவில் ஏகனாபுரம் கிராமத்தில், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.
அதேபோல, காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் தலைமையில், பரந்துார் கிராமத்தில் ஏராளமான போலீசார் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
போராட்டத்திற்கு புறப்பட்ட 19 பேர் குழுவை நேற்று, காலை 9:00 மணி அளவில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை சுங்குவார்சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.