sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்வாரிய அலட்சியம் வாலிபர் உயிரிழப்பு

/

மின்வாரிய அலட்சியம் வாலிபர் உயிரிழப்பு

மின்வாரிய அலட்சியம் வாலிபர் உயிரிழப்பு

மின்வாரிய அலட்சியம் வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 10, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர், : திருநின்றவூர் அடுத்த பாக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 32; பசு மாடு வளர்த்து வந்தார். திருமணமாகாத இவர், தாய் லட்சுமி, 60, உடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை அவரது பசுமாடு ஒன்று, பாக்கம் அருகே கசுவா என்ற கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

பசுமாட்டை அழைத்து வர சென்றபோது, பிரகாஷின் கைகள் விவசாய நிலத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி மீது உரசியதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது.

திருநின்றவூர்போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மின் வாரியம் அலட்சியம்


விவசாய நிலத்தில் மின் கம்பி தாழ்வாக செல்வதாக, பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து, பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பகுதிவாசிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us