sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு

/

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு


ADDED : மார் 10, 2025 07:38 AM

Google News

ADDED : மார் 10, 2025 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 2002ம் ஆண்டு, கணினி முன் பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையத்துடன் புதிய ரயில் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கும் 'பாசஞ்சர்' ரயிலும், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தொலைதுார இடங்களுக்கு வாராந்திர 'எக்ஸ்பிரஸ்' ரயில்களும் இயக்கப்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கானோர், இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில், பெயர் பலகை இல்லாததால், வெளியூரில் இருந்து வரும் பயணியர், ரயில் நிலையத்தை தேடி அலைய வேண்டிய நிலை இருந்தது. இதனால்,நுழைவாயில் பகுதியில், பெயர் பலகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, ரயில்வே நிர்வாகம்சார்பில், ரயில் நிலைய வளாகத்தில், நுழைவாயில் வளைவுஅமைக்கப்பட்டு, அதில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்,காஞ்சிபுரம் ரயில் நிலையம்' என, எழுதப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us