sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வர்ணம் இல்லாத வேகத்தடை வையாவூரில் விபத்து அச்சம்

/

வர்ணம் இல்லாத வேகத்தடை வையாவூரில் விபத்து அச்சம்

வர்ணம் இல்லாத வேகத்தடை வையாவூரில் விபத்து அச்சம்

வர்ணம் இல்லாத வேகத்தடை வையாவூரில் விபத்து அச்சம்


ADDED : மே 17, 2024 11:51 PM

Google News

ADDED : மே 17, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர், கரூர் ஆகிய கிராமங்களின் வழியாக, ராஜகுளம் வரை, புறவழிச்சாலை உள்ளது.

இந்த கிராமங்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளில், வேகத்தடை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறையினர் நத்தப்பேட்டை பிரதான வளைவில், கடந்த ஜனவரி மாதம் வேகத்தடை அமைத்தனர். அதன் மீது கண்துடைப்பிற்கு, வெள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில், சமீபத்தில் மூன்று சந்திப்பு சாலைகளில், வேகத்தடை அமைத்தனர்.

இந்த வேகத்தடைகள் மீது, வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் அளவிற்கு வெள்ளை நிற கோடுகள் வரையவில்லை. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல், திடீரென பிரேக் பிடிப்பதால், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us