/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பகலிலும் ஒளிரும் மின்விளக்குகள்
/
பகலிலும் ஒளிரும் மின்விளக்குகள்
ADDED : ஆக 09, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில், கிராம உட்புற சாலைகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 10 நாட்களாக தெரு மின் விளக்குகள் இரவு, பகல் என, 24 மணி நேரமும் தொடர்ந்துஎரிகின்றன.
பகல் நேரங்களிலும் ஒளிரும் மின் விளக்கினால் மின்சாரம் வீணாகுவதோடு, பல்பும் குறுகிய காலத்தில் பழுதடைகின்றன.
எனவே, தெரு மின் விளக்குகளை முறையாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.