sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

/

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்


ADDED : ஜூலை 16, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம் அடுத்த, களியனுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 122வது காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு,பள்ளி தலைமை ஆசிரியர்மோகனகாந்தி தலைமை வகித்தார். வாழ்முனி நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகி, முத்தி யால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

களியனுார், ஏரிவாய், வள்ளுவப்பாக்கம் உள்ளிட்ட பல பள்ளியைச் சேர்ந்த, 800 மாணவ - மாணவியருக்கு, இலவச நோட்டு புத்தகம், பேனாக்களை வழங்கினார்.

காஞ்சி நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி, சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து ரயில்வே சாலையில் உள்ள பரஞ்சோதியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாரி, பால்குடம் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

காஞ்சி மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த விழாவில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us