/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இலவச கண் மருத்துவ முகாம் காஞ்சியில் நாளை நடக்கிறது
/
இலவச கண் மருத்துவ முகாம் காஞ்சியில் நாளை நடக்கிறது
இலவச கண் மருத்துவ முகாம் காஞ்சியில் நாளை நடக்கிறது
இலவச கண் மருத்துவ முகாம் காஞ்சியில் நாளை நடக்கிறது
ADDED : ஜூலை 26, 2024 08:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 68வது இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறுகிறது.
பெரிய காஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள குஜராத்தி திருமண மண்டபத்தில், நாளை காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.
கண்புரை நோய் உள்ளவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முற்றிலும் இலவசமாக விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இதில், போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின், மீண்டும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வரும் வரை, அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 95438 81888 ஆகிய மொபைல்போன் எண்களிலும், பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டிக்கு சென்றும் முன்பதிவு செய்யலாம் என, கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்த குமார் தெரிவித்தார்.