/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை கழிவுகளால் சந்தவேலுாரில் சீர்கேடு
/
குப்பை கழிவுகளால் சந்தவேலுாரில் சீர்கேடு
ADDED : ஆக 08, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் 200க்கும் அதிகமான சிறு குறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகளை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், சந்தவேலுாரில் கொட்டுகின்றனர்.
இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சர்வீஸ் சாலையோரம் குப்பை கொட்டுபவர்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு. ஆறுமுகம்,
சந்தவேலுார்.