sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மதுபாட்டில் கடத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது

/

மதுபாட்டில் கடத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது

மதுபாட்டில் கடத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது

மதுபாட்டில் கடத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது


ADDED : ஆக 02, 2024 08:46 PM

Google News

ADDED : ஆக 02, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வாலாஜாபாத் பகுதியில் போலீசார், நேற்று காலை வாகன தணிக்கை செய்தபோது, அவ்வழியே வந்த 'மாருதி ஸ்விப்ட்' காரை சோதனை செய்தனர். காரில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இம்மானுவேல்,49, என்பதும், ஓரிக்கை பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.

இதையடுத்து, புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட, 66 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்து, இம்மானுவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us