ADDED : மார் 01, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், ஆண்டுதோறும் மாசி அமாவாசை மறுநாளில், மயான கொள்ளை உற்சவம் நடக்கும்.
நடப்பாண்டு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணி அளவில் கம்மவார்பாளையம் கிராமத்தில் இருந்து, கபாள சட்டி புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டியபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்செலுத்தினர்.
இரவு, மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். கோவிந்தவாடி அகரம் காலனி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் அம்மனை தரிசித்து சென்றனர்.