sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்கு உத்திரமேரூரில் பேரூராட்சி நிதி வீணடிப்பு

/

பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்கு உத்திரமேரூரில் பேரூராட்சி நிதி வீணடிப்பு

பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்கு உத்திரமேரூரில் பேரூராட்சி நிதி வீணடிப்பு

பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்கு உத்திரமேரூரில் பேரூராட்சி நிதி வீணடிப்பு


ADDED : ஜூன் 17, 2024 03:45 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், : உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம் எதிரில், இரவிலும் பகல்போல வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம், உயர்கோபுர மின்விளக்கை முறையாக பராமரிக்காததால், இரவு, பகல் என தொடர்ந்து 24 மணி நேரமும் உயர்கோபுர மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.

இதனால், மின்சாரம் விரயமாவதுடன், பல்புகளும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கு கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பேரூராட்சி நிதியும் வீணாகிறது.

எனவே, உயர்கோபுர மின்விளக்கை முறையாக பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us