/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : செப் 16, 2024 05:32 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் பொறியியல்கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது.
நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 12 மாணவர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தங்கள்அனுபவங்கள், முன்னெடுப்புகளை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்தனர்.
உயர்கல்வியில் படிப்பு விபரங்களும், கல்வி நிலையங்கள் பற்றியும் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கூறப்பட்டது. இரண்டாம்நாள் நிகழ்வான நேற்று, 427 இளைஞர்கள்பங்கேற்றனர்.
வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி நேற்றைய கூட்டத்தில் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. திறனை மேம்படுத்துதல் பற்றி, பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.

