sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் பணியால் சேதமான சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு

/

குடிநீர் பணியால் சேதமான சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு

குடிநீர் பணியால் சேதமான சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு

குடிநீர் பணியால் சேதமான சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு


ADDED : மார் 06, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், ஒரு மாதத்திற்கு முன், நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டி, கடந்த மாதம் சீரமைத்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் பள்ளம் தோண்டிய இடத்தை முறையாக தார் ஊற்றி சாலையை சீரமைக்கவில்லை.

இதனால், சாலை சேதமடைந்த பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர்.

இதனால், சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க ஒரு மாதமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக, மாநகராட்சி ஊழியர்கள் சேதப்படுத்திய சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று தார் கலவை வாயிலாக சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us