/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாலக கட்டடம் காஞ்சி செங்கையில் துவக்கம்
/
நுாலக கட்டடம் காஞ்சி செங்கையில் துவக்கம்
ADDED : செப் 01, 2024 01:41 AM
செங்கல்பட்டு,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தம்மனுார், வில்லிவலம், பிச்சுவாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில், பொன்விளைந்தகளத்துார், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், புதிய கட்டடங்கள் மற்றும் 17 நுாலகங்களுக்கு இணைப்பு கட்டடம் என, மொத்தம் 27 நுாலகங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, அரசுக்கு, மாவட்ட நுாலகத்துறை கருத்துரு அனுப்பி வைத்தது.
அதன்பின், மத்திய அரசு நிதியின் கீழ், 27 நுாலக கட்டடங்கள் கட்ட, தலா 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.
இப்பணிகளை 2 மாதங்களுக்குள் முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாவட்ட நுாலக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.