sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அரசு பேருந்து சேவை துவக்கம்

/

ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அரசு பேருந்து சேவை துவக்கம்

ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அரசு பேருந்து சேவை துவக்கம்

ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அரசு பேருந்து சேவை துவக்கம்


ADDED : ஆக 27, 2024 11:37 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய கோவில்களில், பக்தர்கள் தரிசனம் செய்ய, ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

அரசு பேருந்தில், ஒரு நபருக்கு 650 ரூபாய் கட்டணத்தில், இந்த ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காலை 7:20 மணிக்கு துவங்கும் சுற்றுலா, வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கோவிந்தவாடி குருபகவான் கோவில் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

மதிய உணவுக்கு பின், திருத்தணி முருகன் கோவில், திருவாலங்காடு தேவார சிலாயம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் என, 8 கோவில்களில் தரிசனம் முடித்து, இரவு 8:45 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றுலா முடிகிறது.

இந்த சேவையை, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, அமைச்சர் அன்பரசன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சேர்த்து, மூன்று கால்நடை மருத்துவ வாகன சேவையை, அமைச்சர் அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us