sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பட்டா கிராம கல்குவாரிகளால் கனரக வாகனங்கள் அதிகரிப்பு

/

பட்டா கிராம கல்குவாரிகளால் கனரக வாகனங்கள் அதிகரிப்பு

பட்டா கிராம கல்குவாரிகளால் கனரக வாகனங்கள் அதிகரிப்பு

பட்டா கிராம கல்குவாரிகளால் கனரக வாகனங்கள் அதிகரிப்பு


ADDED : செப் 07, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 07, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர், பட்டா ஆகிய கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பட்டா கிராம சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

இரவு, பகலாக தொடர்ந்து இயங்கும் இந்த வாகனங்களால் அப்பகுதியினர் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:

சில மாதங்களாக பட்டா கிராம சாலை வழியாக கனரக வாகனங்கள் இயக்கம் அதிகரித்துள்ளது. இந்த வாகனங்களால் பட்டா சாலையில் மண் படிந்து காணப்படுகிறது.

மேலும், லோடு லாரிகள் தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுவதால், லாரிகளில் இருந்து கொட்டும் எம்.சான்ட் மணல் உள்ளிட்டவை சாலையோரங்களில் தேங்கி அவை மண் புழுதியாக நாள் முழுக்க பறக்கின்றன.

சாலை மட்டுமின்றி, சாலையோரங்களின் இருபுறமும் உள்ள வீடுகளிலும் மண்புழுதி புகுந்து சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் குடியிருப்பு சாலை வழியாக கனரக வாகனங்கள் இயங்குவதை தவிர்த்து மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us