sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வலியுறுத்தல்

/

நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வலியுறுத்தல்

நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வலியுறுத்தல்

நீராழி மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஜூன் 18, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள சர்வதீர்த்தகுளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தின் மையப் பகுதியில் நீராழி மண்டபம் உள்ளது.

இந்த மண்டபத்தில் அடிக்கடி அரச மரச்செடிகள் வளர்வதும், கோவில் நிர்வாகம் சார்பில் செடிகளை பெயரளவிற்கு அகற்றுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நீராழி மண்டபத்தில் வளர்ந்து இருந்த அரச மரச்செடிகளை கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்நிலையில், மூன்றே மாதத்தில், நீராழி மண்டபத்தில் மீண்டும் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன.

இச்செடிகளின் வேர்கள் மண்டப கோபுரத்தில் வேரூன்றி வளர்ந்து வருவதால், நாளடைவில் மண்டபம் முற்றிலும் வலுவிழந்து இடிந்து விழும் சூழல் உள்ளது.

எனவே, நீராழி மண்டபத்தில் செழித்து வளர்ந்து வரும் செடிகளை வேருடன் அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.






      Dinamalar
      Follow us