sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

/

கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை


ADDED : ஜூன் 01, 2024 06:04 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி, : எழும்பூர், காவல் துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு, நேற்று முன்தினம் இரவு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், கிண்டியில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறி, இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து, கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு பிரிவு போலீசார், மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

பல மணி நேரம் நடத்திய சோதனையில் வெடி பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிந்த சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மொபைல்போன் எண், கள்ளக்குறிச்சி, எலவனசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி போலீசார், தேவராஜை பிடித்தனர்.

விசாரணையில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இருப்பினும், அவரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us