sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியர் பலி

/

மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியர் பலி

மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியர் பலி

மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியர் பலி


ADDED : மார் 11, 2025 12:29 AM

Google News

ADDED : மார் 11, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம், கடம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் நேதாஜி, 34. திருமணமாகாதவர். இவர், இரண்டு ஆண்டுகளாக, சென்னை, சாலிகிராமம், விஜயராகவபுரம் பகுதியில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் குடியிருந்த வீட்டில் இருந்து, நேற்று அதிகாலை அதிகளவில் புகை வந்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள மெத்தை எரிந்த நிலையில், அருகே மயங்கிய நிலையில் நோதாஜி கிடந்துள்ளார். தகவலறிந்து '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

அவர்கள் பரிசோதித்த போது, வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே.நகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சம்பவத்தன்று மது போதையில் சிகரெட் பற்ற வைத்த போது, மெத்தையில் தீப்பிடித்ததாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட புகையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேதாஜி உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துஉள்ளது.

கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us