sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் விரைவில் திறப்பு

/

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் விரைவில் திறப்பு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் விரைவில் திறப்பு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் விரைவில் திறப்பு


ADDED : மார் 07, 2025 12:37 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:மத்திய அரசின் மருந்தியல் அமைச்சகம் சார்பில், அனைவருக்கும் மலிவு விலையில் பொது மருந்துகள் கிடைக்க, குறைந்த லாபத்தில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்தகத்தை நாடு முழுதும், பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா எனப்படும், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்' முக்கிய ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிகளவு பயணியர் வந்து செல்லும் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்' அமைக்க, மத்திய அரசின் மருந்தியல் அமைச்சகம் முடிவு செய்தது அதன்படி, புதிய ரயில் நிலையத்தில் மருந்தகம் கட்டுமானப் பணி, 10 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது.

இதுகுறித்து ரயில் நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்' அமைக்கப்பட்டுள்ளது. மருந்தகம் திறப்பது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் மருந்தகம் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us